என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
நடிகர் தனுஷ் சில வாரங்களாக தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து அவர்களுக்கு விருந்து பரிமாறி வருகிறார். என்ன நடக்குது. அவருக்கும் அரசியல் ஆசையாக என விசாரித்தால் 'கடந்த சில ஆண்டுகளாக அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் விரும்பினர். அது ஏனோ நடக்கவில்லை. இப்போது அந்த ஆசையை நிறைவேற்றி வைத்து வருகிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் போட்டோ எடுத்து, அவர்களுக்கு சைவ, அசைவ விருந்து, அவர்கள் குடும்பத்தினர்களுக்கு பட்டுப்புடவை, குழந்தைகளுக்கு சாக்லெட், ஸ்கூல் பேக் என உபசரிக்கிறார். இது ரசிகர் மன்றங்கள் மூலமாக திட்டமிட்டு நடத்தப்படுகிறது. கடந்த ஞாயிறு சென்னை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் போட்டோ, எடுத்தார். இந்த ஞாயிற்றுகிழமை புதுச்சேரி, கடலுார், விழுப்புரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்தார்.
இதுவரை 10 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். 8 ஆண்டுகளுக்குபின் இந்த சந்திப்பு நடக்கிறது. இத்தனை ஆண்டுகள் தனக்காக விசில், கைதட்டல் கொடுத்த, பட ரிலீஸ் சமயத்தில் கட்அவுட், பேனர் வைத்த, சோஷியல் மீடியாவி்ல சப்போர்ட் ஆக இருக்கிற, தான் கஷ்டப்படுகிற காலத்தில் வாய்ஸ் கொடுக்கிற, தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக பல நல்ல காரியங்கள் செய்தவர்களுக்கு அவர் செலுத்தும் சின்ன நன்றி கடன் என்கிறார்கள்.