படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
ராஜ்யசபா எம்பி ஆகிவிட்ட நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக அரசு முத்திரை பதித்த லட்டர் பேட்டில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பாராட்டி, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எம்பி ஆனபின் முதல் கையெழுத்தும் இதுதான் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த அகரம் 15 ஆண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், என்னை சித்தப்பா என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என சூர்யா புகழ்கிறார். நான் அவரை தம்பி என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என யோசிக்கிறேன் என்று பேசினார்.
மேலும் என் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற, அண்ணன் சிவகுமார்தான் காரணம். அந்த காலத்தில் அவர் நமக்கு எதுக்கு ரசிகர் மன்றம் என கேட்டார். பாலசந்தரால் நான் நட்சத்திர அந்தஸ்து பெற என் மீது பாசத்தில் வந்தவர்களை நற்பணி மன்றத்தில் சேர்த்தேன் என்றார். மேலும் அகரம் பவுண்டேசன் பற்றி சமீபத்தில் முதல்வரிடம் கூட பேசினேன். இவர்களை போன்றவர்கள் பணம் கேட்கவில்லை. அனுமதிதான் கேட்கிறார்கள் அரசு உதவி செய்ய வேண்டும் என்றேன் என்றார்.
சூர்யா குடும்பம் கமல்ஹாசன் நட்பு அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் 'கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் முழுநீள ஹீரோ வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.