பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
பாலிவுட் நடிகர்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை போல நடிகைகள் சொகுசு வீடுகளை வாங்குவதில் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தீபிகா படுகோனே இணைந்துள்ளார். மும்பை பாந்த்ரா கடற்கரைக்கு அருகில் உள்ள பிரமாண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது தளத்தில் உள்ள 4 வீடுகளையும் வாங்கி உள்ளார். இதன் மூலம் 16வது தளம் முழுக்கவே அவரது சொந்தமாகிறது. 4 வீடுகளும் தனித்தனியாக இருந்தாலும் தற்போது எல்லா வீடுகளையும் ஒரே வீடாக அவர் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளின் மொத்த விலை ரூ.119 கோடி என்கிறார்கள்.
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு மகாராஷ்டிராவில் மாநிலம் அலிபாக் நகரில் அரண்மனை போன்ற பங்களாக உள்ளது. சினிமாவில் நடிக்க வசதியாக மும்பை பாந்தாரா பகுதியில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இப்போது அந்த பகுதியிலேயே சொந்த வீடு வாங்கி விட்டார். இதுதவிர பாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகாவிற்கு அமெரிக்காவிலும் சொந்த வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 15 கோடி வாங்கி வந்த அவர் பதான் படத்திற்கு பிறகு 25 கோடியாக உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.