பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர், நிறைய காதலிப்பார் திடீரென எல்லாவற்றையும் ரத்து செய்வார். முதல் நாள் காதலனுடன் படு நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவார். மறுநாள் காதலன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளிப்பார்.
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாடகர் மிகா சிங் தனது பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடினார். இந்த விழாவில் ராக்கி சாவந்த் கலந்து கொண்டார். பார்ட்டி உச்சத்தில் இருக்கும் போது பாடகர் மிகா சிங், ராக்கி சாவந்தை இழுத்து பிடித்து ஒரு உம்மா கொடுத்துவிட்டார். இது தொடர்பாக ராக்கி சாவந்த் போலீசில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்து போலீசார் மிகா சிங் மீது வழக்கு தொடர்ந்தனர். 7 ஆண்டுகளாக மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
பாடகர் மிகா சிங்கும், நடிகை ராக்கி சாவந்தும் நாங்கள் முத்த பிரச்சினையை எங்களுக்குள் பேசி முடித்து சமாதானமாகி விட்டோம். அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.