அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
பாலிவுட் நடிகர்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை போல நடிகைகள் சொகுசு வீடுகளை வாங்குவதில் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தீபிகா படுகோனே இணைந்துள்ளார். மும்பை பாந்த்ரா கடற்கரைக்கு அருகில் உள்ள பிரமாண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது தளத்தில் உள்ள 4 வீடுகளையும் வாங்கி உள்ளார். இதன் மூலம் 16வது தளம் முழுக்கவே அவரது சொந்தமாகிறது. 4 வீடுகளும் தனித்தனியாக இருந்தாலும் தற்போது எல்லா வீடுகளையும் ஒரே வீடாக அவர் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளின் மொத்த விலை ரூ.119 கோடி என்கிறார்கள்.
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு மகாராஷ்டிராவில் மாநிலம் அலிபாக் நகரில் அரண்மனை போன்ற பங்களாக உள்ளது. சினிமாவில் நடிக்க வசதியாக மும்பை பாந்தாரா பகுதியில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இப்போது அந்த பகுதியிலேயே சொந்த வீடு வாங்கி விட்டார். இதுதவிர பாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகாவிற்கு அமெரிக்காவிலும் சொந்த வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 15 கோடி வாங்கி வந்த அவர் பதான் படத்திற்கு பிறகு 25 கோடியாக உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.