முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ | மோகன்லால் மேல் எனக்கு மரியாதையே கிடையாது : சாந்தி வில்லியம்ஸ் | 'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம் | தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் | அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் |
சென்னை : கடன் விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக, லைகா நிறுவனம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'விஷால் நிறுவனம் தரப்பில், 15 கோடி ரூபாய் மட்டுமே கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட்டை, விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை, முதல் பெஞ்ச் உறுதி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற தவறினால், விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை எந்த வழியிலும் வெளியிடவும் தடை விதித்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியதாக, விஷாலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, லைகா நிறுவனம் தாக்கல் செய்தது. மனு, நீதிபதி சவுந்தர் முன், விசாரணைக்கு வந்தது. தங்கள் நிறுவனம் சார்பில், தற்போது எந்த படங்களையும் தயாரிக்கவில்லை என, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லைகா நிறுவனத்தின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். பிரதான வழக்கில், வரும், 26ல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதாக, நீதிபதி தெரிவித்தார்.