ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா புரொடக்ஷன்ஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த நிறுவனம். மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்க, மோகன்லால் நடிக்க 'எல் 2 எம்புரான்' படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏதோ ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதிக்குப் பிறகு அப்படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது எக்ஸ் தளத்தில் அந்நிறுவனம் பதிவிடவில்லை. மேலும், முன்னரே அறிவித்தபடி மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்குப் பதிலாக கோகுலம் சினிமாஸ் நிறுவனம் உள்ளே நுழைந்துள்ளது. நடிகர் மோகன்லால் நேற்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது பதிவில் லைக்கா நிறுவனத்தை அவர் 'டேக்' செய்யவில்லை. பட வெளியீட்டு விவகாரத்தில் லைக்கா நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.




