'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் |

நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தெலுங்கில் நடித்த மல்லி பெல்லி படம் ரிலீஸாகியுள்ளது. இதனையொட்டி திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதென்றும், தற்போது ரிலீஸாகியுள்ள மல்லி பெல்லி திரைப்படம் ஹிட் அடைய வேண்டிகொண்டதாகவும் கூறினார். மேலும், 'அம்மா மற்றும் கடவுளின் ஆசியோடு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கும் காலத்தில் நான் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளேன். அதை பாக்கியமாக கருதுகிறேன். நல்ல கேரக்டர்கள் எனக்கு அமைகிறது' என்றார். அடுத்து திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வனிதா, 'கடவுளின் கிருபையால் மீண்டும் காதல் வந்தால் பார்க்கலாம். அதைபற்றியெல்லாம் பயமோ, தயக்கமோ எனக்கு கிடையாது' என்று கூறியுள்ளார்.