மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நரேஷ் - பவித்ரா. மறைந்த நடிகர் கிருஷ்ணா மனைவியின் மகனும், முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் இதற்கு முன்பு மூன்று திருமணங்களைச் செய்தவர். அவர் கன்னடத்திலிருந்து தெலுங்கில் நடிக்க வந்த அம்மா வேட நடிகை பவித்ராவைக் காதலிப்பதாக செய்திகள் பரவியது. நரேஷின் மூன்றாவது மனைவி செய்த தகராறால் நரேஷ் - பவித்ரா காதல் உண்மை என்று வெளிச்சத்திற்கு வந்தது.
நரேஷ், பவித்ரா இருவரும் அவர்களது சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'மல்லி பெல்லி' என்ற படத்தில் நடித்துள்ளார்கள். அந்தப் படத்தின் புரமோஷன் என சில வீடியோக்களும் வெளிவந்தது. அது அவர்களது சொந்த வாழ்க்கையைப் போல இருந்ததால் அதையும் உண்மை என்று நம்பி பலரும் செய்திகளை வெளியிட்டார்கள். அப்படம் நேற்று தெலுங்கில் வெளியாகிள்ளது. படத்தைப் பார்த்தபின்புதான் அவர்களது சொந்தக் கதையையே சில மாற்றங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
படத்தின் இயக்குனரான எம்எஸ் ராஜு, நரேஷ் கொடுத்த பல விஷயங்களுடன் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நரேஷின் மூன்றாவது மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துளளாராம். படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இல்லை என்றாலும் நரேஷ் - பவித்ரா காதல் சர்ச்சையை வைத்தே படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கிறார்களாம்.