அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நரேஷ் - பவித்ரா. மறைந்த நடிகர் கிருஷ்ணா மனைவியின் மகனும், முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் இதற்கு முன்பு மூன்று திருமணங்களைச் செய்தவர். அவர் கன்னடத்திலிருந்து தெலுங்கில் நடிக்க வந்த அம்மா வேட நடிகை பவித்ராவைக் காதலிப்பதாக செய்திகள் பரவியது. நரேஷின் மூன்றாவது மனைவி செய்த தகராறால் நரேஷ் - பவித்ரா காதல் உண்மை என்று வெளிச்சத்திற்கு வந்தது.
நரேஷ், பவித்ரா இருவரும் அவர்களது சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'மல்லி பெல்லி' என்ற படத்தில் நடித்துள்ளார்கள். அந்தப் படத்தின் புரமோஷன் என சில வீடியோக்களும் வெளிவந்தது. அது அவர்களது சொந்த வாழ்க்கையைப் போல இருந்ததால் அதையும் உண்மை என்று நம்பி பலரும் செய்திகளை வெளியிட்டார்கள். அப்படம் நேற்று தெலுங்கில் வெளியாகிள்ளது. படத்தைப் பார்த்தபின்புதான் அவர்களது சொந்தக் கதையையே சில மாற்றங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
படத்தின் இயக்குனரான எம்எஸ் ராஜு, நரேஷ் கொடுத்த பல விஷயங்களுடன் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நரேஷின் மூன்றாவது மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துளளாராம். படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இல்லை என்றாலும் நரேஷ் - பவித்ரா காதல் சர்ச்சையை வைத்தே படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கிறார்களாம்.