இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. 30க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கும், அவருடைய முதல் கணவர் கிருஷ்ணமூர்த்திக்கும் பிறந்தவர் தெலுங்கு நடிகர் நரேஷ். விஜய நிர்மலா பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்து கொண்டார். கிருஷ்ணாவிற்கு அதற்கு முன்பாகவே இந்திரா தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றுவிட்டது. அவர்களது மகன்தான் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு.
விஜய நிர்மலாவின் மகன் நரேஷ் திரையுலகத்தில் அறிமுகமாகி 50 வருடங்களாகிறது. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் என்ற விதத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். நரேஷ் நான்கவதாக திருமணம் செய்து கொண்டவர் கன்னட நடிகை பவித்ர லோகேஷ்.

திரையுலகில் தன்னுடைய 50வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் சில்கூர் என்ற கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறப்பு விருந்து ஒன்றை நடத்தினார். அதில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை பூனம் தில்லான், தமிழ் நடிகைகள் ஜெயப்பிரதா, மேனகா, சுஹாசினி, குஷ்பு மற்றும் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அதோடு “விஜயகிருஷ்ணா மந்திர் மற்றும் கட்டமனேனி இந்திரா தேவி ஸ்பூர்த்தி வனம்” என்ற பூங்காவையும் திறந்தார் நரேஷ். அந்தப் பூங்காவில் நடிகர் கிருஷ்ணா பற்றிய திரைப்பட நூலகம், மியூசியம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.