பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. 30க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கும், அவருடைய முதல் கணவர் கிருஷ்ணமூர்த்திக்கும் பிறந்தவர் தெலுங்கு நடிகர் நரேஷ். விஜய நிர்மலா பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்து கொண்டார். கிருஷ்ணாவிற்கு அதற்கு முன்பாகவே இந்திரா தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றுவிட்டது. அவர்களது மகன்தான் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு.
விஜய நிர்மலாவின் மகன் நரேஷ் திரையுலகத்தில் அறிமுகமாகி 50 வருடங்களாகிறது. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் என்ற விதத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். நரேஷ் நான்கவதாக திருமணம் செய்து கொண்டவர் கன்னட நடிகை பவித்ர லோகேஷ்.
திரையுலகில் தன்னுடைய 50வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் சில்கூர் என்ற கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறப்பு விருந்து ஒன்றை நடத்தினார். அதில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை பூனம் தில்லான், தமிழ் நடிகைகள் ஜெயப்பிரதா, மேனகா, சுஹாசினி, குஷ்பு மற்றும் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அதோடு “விஜயகிருஷ்ணா மந்திர் மற்றும் கட்டமனேனி இந்திரா தேவி ஸ்பூர்த்தி வனம்” என்ற பூங்காவையும் திறந்தார் நரேஷ். அந்தப் பூங்காவில் நடிகர் கிருஷ்ணா பற்றிய திரைப்பட நூலகம், மியூசியம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.