ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி உள்ள கென்னடி படம் அங்கு திரையிடப்பட்டது. இதில் அனுராக் உடன் நாயகன் ராகுல் பட் மற்றும் சன்னி லியோனும் பங்கேற்றனர். பிங்க் நிற கவுன் அணிந்து சிவப்பு நிற கம்பளத்தில் ஒய்யாரமாக நடை போட்டார் சன்னி லியோன்.
இந்த விழாவில் பங்கேற்றது பற்றி சன்னி லியோன் கூறுகையில், ‛‛இந்திய சினிமாவைப் நானும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் இதுவரைக்குமான பெருமையான தருணம் இது. இதற்காக இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு நன்றி சொல்கிறேன். பெரும்பாலும் என்னை ஆபாச பட நடிகை என்பர். இனி என்னை அப்படி கூற முடியாது. சினிமாவுக்குள் நான் வர பெரிய தடை இருந்தது. தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. கொலை செய்து விடுவதாக கூட மிரட்டினர்'' என்றார்.