மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கதாநாயகியாக நடித்துள்ள ஐந்தாவது படமான 'தீராக் காதல்' படம் நாளை வெளியாக உள்ளது.
இதற்கு முன்பு இந்த ஆண்டில் அவர் நடித்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன்' ஆகிய படங்கள் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகின. அடுத்து ஏப்ரல் 14ம் தேதி 'சொப்பன சுந்தரி' படமும், மே 12ம் தேதி 'பர்ஹானா' படமும் வெளிவந்தன. இந்த மாதத்தில் ஐஸ்வர்யா நடித்து வெளிவரும் இரண்டாவது படம் 'தீராக் காதல்'.
ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவின் நடிப்பு படத்திற்குப் படம் வளர்ந்து வருகிறது. மற்ற முன்னணி நடிகைகளைக் காட்டிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் தொடர்ந்து பாராட்டைப் பெற்று வருகிறார் ஐஸ்வர்யா. நாளை வெளியாக உள்ள 'தீராக் காதல்' படத்திலும் அவரது கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் சிறப்பாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.