சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 68வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும், தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலிலேனி இயக்குகிறார் என்று சமீபகாலமாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மற்றொரு தகவல் பரவியது. அந்த தகவலின் படி, விஜய்-ன் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனராம். விஜய்யின் பிறந்தநாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் வெங்கட்பிரபு ஒரு பேட்டியின் போது விஜய்யின் படத்தை பற்றி பேசினார். அந்த வீடியோ டிரெண்ட் ஆனது.