‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கேரளாவில் நேற்று முன்தினம் இளம் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் கத்தியால் குக்கி கொல்லப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாரக்கராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ். சமீபத்தில் தான் மருத்துவ படிப்பை முடித்த இவர் இங்கு டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசார் பிடித்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்ற அந்த நபர் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டாக்டர் வந்தனாவை கத்தியால் பலமுறை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே வந்தனா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்தனாவின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி வந்தனாவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று வந்தனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோர் மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமாரி ஆகியோருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார். மம்முட்டியுடன் அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் மற்றும் நடிகர் ரமேஷ் பிஷரோடி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.