'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்பு பணம் புழங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரிடம் இருந்து அமலாக்கத்துறை 25 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட சில மலையாள ஊடகங்கள் மற்றும் யு டியூப் சேனல்கள் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது நடிகர் பிருத்விராஜ் என்று செய்தி வெளியிட்டன.
இது குறித்து பிருத்விராஜ் வெளியிட்ட பதிவு : ‛‛பொதுவாக இம்மாதிரியான செய்திகளை நான் கடந்து செல்வதே வழக்கம். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிய இந்த அபாண்ட செய்திக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறேன்” என கோபமாக அறிவித்துள்ளார்.