இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

மலையாள சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்பு பணம் புழங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரிடம் இருந்து அமலாக்கத்துறை 25 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட சில மலையாள ஊடகங்கள் மற்றும் யு டியூப் சேனல்கள் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது நடிகர் பிருத்விராஜ் என்று செய்தி வெளியிட்டன.
இது குறித்து பிருத்விராஜ் வெளியிட்ட பதிவு : ‛‛பொதுவாக இம்மாதிரியான செய்திகளை நான் கடந்து செல்வதே வழக்கம். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிய இந்த அபாண்ட செய்திக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறேன்” என கோபமாக அறிவித்துள்ளார்.




