நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் பிரியங்கா மற்றும் மாகாபா இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர்களாக பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள்.. பாக்யராஜ், டி.ராஜேந்தர், வித்யாசாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இந்நிலையில் வரும் வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா இணைகிறார்.
“இந்த நிகழ்ச்சியில் இணைவதற்கு தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் . சிறப்பான குரல் தேடல்களை தொடர்ந்து செய்து வரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தான் பார்த்து வருகிறேன். என்னை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் யுவன்.