சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நெல்சன் இயக்கத்தில் நடித்து வந்த ஜெயிலர் படத்தில் தனக்கான காட்சிகளை கிட்டத்தட்ட முடித்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்ததுள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்து மும்பையில் நடைபெற உள்ள லால் சலாம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினிகாந்த்.




