என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காகத் தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகர் விக்ரம். அவருக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த 'சேது' படத்திலிருந்து, அடுத்து அவர் நடிப்பில் வந்த முக்கியப் படங்களான 'பிதாமகன், ஐ' ஆகிய படங்களிலும் தன்னுடைய தோற்றத்தை கடுமையாக மாற்றியிருப்பார்.
இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்திற்காக தலைமுடி, தாடி வளர்த்து தன்னுடைய தோற்றத்தை ஒல்லியாக்கி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விலா எலும்பில் காயமேற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது ஓய்வில் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
'தங்கலான்' படத்தின் கதை அந்தக் காலக் கதையாக உருவாகி வருகிறது. கேஜிஎப் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடிக்கும் போது தினமும் விக்ரமிற்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு நடித்து வருகிறாராம். ரத்தம் சிந்தி உழைப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால், 'தங்கலான்' படப்பிடிப்பில் குழுவினரும், விக்ரமும் உண்மையிலேயே அப்படித்தான் உழைத்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படமாக 'தங்கலான்' படம் இருக்கும் என்பது கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.