மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காகத் தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகர் விக்ரம். அவருக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த 'சேது' படத்திலிருந்து, அடுத்து அவர் நடிப்பில் வந்த முக்கியப் படங்களான 'பிதாமகன், ஐ' ஆகிய படங்களிலும் தன்னுடைய தோற்றத்தை கடுமையாக மாற்றியிருப்பார்.
இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்திற்காக தலைமுடி, தாடி வளர்த்து தன்னுடைய தோற்றத்தை ஒல்லியாக்கி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விலா எலும்பில் காயமேற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது ஓய்வில் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
'தங்கலான்' படத்தின் கதை அந்தக் காலக் கதையாக உருவாகி வருகிறது. கேஜிஎப் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடிக்கும் போது தினமும் விக்ரமிற்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு நடித்து வருகிறாராம். ரத்தம் சிந்தி உழைப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால், 'தங்கலான்' படப்பிடிப்பில் குழுவினரும், விக்ரமும் உண்மையிலேயே அப்படித்தான் உழைத்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படமாக 'தங்கலான்' படம் இருக்கும் என்பது கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.