ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை குறித்து இயக்குனர் ஹரி பேட்டி அளித்துள்ளார். அதன்படி, "விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். அதனால் எனக்கு நிறைய பொறுப்பு உள்ளது. குறிப்பாக விஷால் இந்த படத்தில் போலீஸாக நடிக்கவில்லை. எப்போதும் என் படங்களில் வருவது போல அதிரடியான சண்டை காட்சிகள் இந்த படத்திலும் உள்ளது. இந்த படத்தில் பேசப்படும் கன்டென்ட் தனித்துவமானது. அதேபோல் இப்படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி,ரேணிகுண்டா,காரைக்குடி,வேலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் " என கூறியுள்ளார்.