சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை குறித்து இயக்குனர் ஹரி பேட்டி அளித்துள்ளார். அதன்படி, "விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். அதனால் எனக்கு நிறைய பொறுப்பு உள்ளது. குறிப்பாக விஷால் இந்த படத்தில் போலீஸாக நடிக்கவில்லை. எப்போதும் என் படங்களில் வருவது போல அதிரடியான சண்டை காட்சிகள் இந்த படத்திலும் உள்ளது. இந்த படத்தில் பேசப்படும் கன்டென்ட் தனித்துவமானது. அதேபோல் இப்படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி,ரேணிகுண்டா,காரைக்குடி,வேலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் " என கூறியுள்ளார்.