20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.
இந்நிலையில் இந்த படத்தை குறித்து இயக்குனர் ஹரி பேட்டி அளித்துள்ளார். அதன்படி, "விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். அதனால் எனக்கு நிறைய பொறுப்பு உள்ளது. குறிப்பாக விஷால் இந்த படத்தில் போலீஸாக நடிக்கவில்லை. எப்போதும் என் படங்களில் வருவது போல அதிரடியான சண்டை காட்சிகள் இந்த படத்திலும் உள்ளது. இந்த படத்தில் பேசப்படும் கன்டென்ட் தனித்துவமானது. அதேபோல் இப்படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி,ரேணிகுண்டா,காரைக்குடி,வேலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் " என கூறியுள்ளார்.