மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛சாகுந்தலம்'. புராண இதிகாசமான சகுந்தலையின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. வசூலில் திணறி வருகிறது. இந்நிலையில் ஹீரோயின் அந்தஸ்ததை சமந்தா இழந்துவிட்டார் என தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு கடுமையாக அவரை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛விவாகரத்துக்கு பின் தனது வாழ்வாதாரத்திற்காக புஷ்பா படத்தில் நடனமாடினார் சமந்தா. ஸ்டார் ஹீரோயின் என்ற அந்தஸ்தை அவர் இழந்துவிட்டார். நாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டது. மீண்டும் அவரால் நட்சத்திர அந்தஸ்தை பெற முடியாது. யசோதா படம் வெளியான சமயத்தில் கண்ணீர் விட்டு சமந்தா புரொமோஷன் செய்தார். அதேயுக்தியை சாகுந்தலம் படத்திற்கும் கையாண்டார் எடுபடவில்லை. ஒவ்வொருமுறையும் சென்ட்டிமென்ட் கை கொடுக்காது. கதையும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான செயல்கள் எடுபடாது,'' என கூறியுள்ளார்.