
கர்ப்பிணி என்றும் பாராமல் கணவர் இழுத்துச் சென்றாரா - சனாகான் விளக்கம்
அவர் கூறுகையில், இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அதிக நேரம் நின்று கொண்டிருந்ததால் எனக்கு வியர்த்து கொட்டியது. அங்கு நீண்ட நேரம் என்னால் நிற்க முடியவில்லை. அதன் காரணமாகவே எனது கணவர் என்னை அங்கிருந்து அழைத்து சென்றார். அதோடு என்னுடைய காருக்கு சென்றால்தான் தண்ணீர் மற்றும் ஏதாவது என்னால் சாப்பிட முடியும். அதோடு அந்த விருந்து நிகழ்ச்சியை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதன் காரணமாகவே விரைவாக அங்கிருந்து செல்லலாம் என்று என் கணவர் இடத்தில் நான் கூறியதால் அவர் என்னை வேகமாக அழைத்துச் சென்றார். இதுதான் அப்போது நடந்தது. இருப்பினும் என் மீது அக்கறை கொண்டு ஆதரவு தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார் சனாகான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!