தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் பாகம் 2021ம் வருடம் வெளியாகி சுமார் 350 கோடியை வசூலித்தது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிற. இந்நிலையில் இன்று காலை முதல் 'புஷ்பா 2'தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திலும், இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படம் பற்றிய பல்வேறு தகவல்கள் உலவி வருகின்றன. 2000 கோடி வரை படத்திற்கு வியாபாரம் நடப்பதாக யாரோ எழுதி இருந்தார்கள். ஹிந்தி உரிமை 200 கோடி, இசை உரிமை 75 கோடி, அல்லு அர்ஜுன் சம்பளம் 200 கோடி, சுகுமார் சம்பளம் 50 கோடி என ஓவராக எழுதியிருந்தார்கள். அது கூட வருமான வரி சோதனைக்குக் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
சமூக வலைத்தளங்களில் இப்படி யாரோ கிளப்பிவிட்டு 'புஷ்பா' குழுவுக்கு இப்படி சோதனை ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.