இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
சமந்தா நடித்து முடித்துள்ள படம் 'சாகுந்தலம்'. புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை குணசேகரன் இயக்கி உள்ளார். சமந்தாவுடன் தேவ் மோகன், சச்சின் கடேகர், மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
காளிதாசர் எழுதிய 'சாகுந்தலம்' என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை படக்குழுவினருடன் பார்த்த சமந்தா அதுபற்றி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது : சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நமது காவியங்களில் ஒன்றான இந்தக் கதையை அழகாக எடுத்திருக்கிறீர்கள். இதன் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் குடும்பமாக நிச்சயம் மகிழ்வார்கள். குழந்தைகளும் இந்த மாய உலகத்தை ரசிக்கப் போகிறார்கள். இந்த அற்புதமான பயணத்துக்காக, தில் ராஜுக்கும் நீலிமாவுக்கும் (தயாரிப்பாளர்கள்) நன்றி. இந்தப் படம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும். என்று எழுதியுள்ளார்.