எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை வசூலித்துள்ளது 'பதான்'.
இதற்கு முன்பு 1000 கோடி வசூலித்த படங்களாக 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டங்கல்' ஆகிய படங்கள் இருக்கின்றன. அவற்றில் டங்கல் மட்டுமே ஹிந்திப் படம், மற்ற மூன்று படங்களும் தென்னிந்திய மொழிப் படங்கள். சீனா வெளியீடு இல்லாமலேயே 'பதான்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
'டங்கல்' படம் இந்தியாவில் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் வெளியாகி அங்கு மட்டுமே 1300 கோடி வசூலைப் பெற்றது. முதல் கட்ட வெளியீட்டில் அப்படம் மொத்தமாக 700 கோடி மட்டுமே வசூலித்தது. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 'பதான்' படத்தின் வசூலை முதல் கட்ட வெளியீட்டிலேயே 1000 கோடி வசூல் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.