அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கடந்தாண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அந்த படம் வெளியான சில நாட்களிலேயே படத்தில் இடம்பெற்ற வராஹரூபம் என்கிற பாடல் ஏற்கனவே மலையாளத்தில் பிரபலமாக விளங்கும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற இசைக்குழு உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பியாக உருவாகி இருந்தது என்கிற சர்ச்சை கிளம்பியது. அதை காந்தாரா பட இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் மறுத்தார்.
இதைத் தொடர்ந்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு காப்பிரைட் உரிமை மீறல் என்கிற அடிப்படையில் காந்தாரா பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் பட தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு கூட இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் இருவருமே கோழிக்கோடு காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, இந்த வழக்கில் இந்த படத்தை கேரளாவில் வெளியிட்ட நடிகர் பிரித்விராஜையும் தொடர்புபடுத்தி காவல் துறையில் புகார் அளித்ததன் பேரில் பிரித்விராஜ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த எப்ஐஆர்-ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரித்விராஜ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிரித்விராஜ் மீது தொடரப்பட்ட எப்ஐஆர- ஐ தள்ளுபடி செய்தது. மேலும் இதுபற்றி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பிரித்விராஜை பொறுத்தவரை அவர் காந்தாரா படத்தை கேரளாவில் வெளியிட்ட ஒரு விநியோகஸ்தர் மட்டுமே.. அவருக்கும் இந்த காப்பிரைட் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை தேவையில்லாமல் இந்த வழக்கிற்குள் இழுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது. இது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்துக்கொண்டே தான் செல்லும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.