நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் பிரபல சீனியர் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் கிங் ஆப் கோத படப்பிடிப்பிற்கு விசிட் அடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதேபோல இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்தார் டொவினோ தாமஸ். தற்போது மீண்டும் அவர் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரோ என்கிற யூகங்கள் சோசியல் மீடியாவில் கிளம்பியுள்ளன. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குறூப் என்கிற படத்திலும் சில நிமிடங்களே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.