தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகை நித்யா மேனன் கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் நமக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என படம் பார்த்த ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விசிட் அடித்த நித்யா மேனன் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார் நித்யா மேனன். அவர்களும் அதை ரொம்பவே ஆர்வமுடன் கேட்கிறார்கள். இந்த அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ள நித்யா மேனன் இந்த புது ஆண்டில் எனக்கு கிடைத்த அன்பு இது. இங்கிருந்து நான் எடுத்து செல்வதற்கு எனக்கு நிறையவே கிடைத்தது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் தங்களை சுற்றி உள்ளவற்றை புரிந்து கொள்ளும் அதிகப்படியான தன்மையுடனும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.