கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
நடிகை நித்யா மேனன் கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் நமக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என படம் பார்த்த ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விசிட் அடித்த நித்யா மேனன் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார் நித்யா மேனன். அவர்களும் அதை ரொம்பவே ஆர்வமுடன் கேட்கிறார்கள். இந்த அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ள நித்யா மேனன் இந்த புது ஆண்டில் எனக்கு கிடைத்த அன்பு இது. இங்கிருந்து நான் எடுத்து செல்வதற்கு எனக்கு நிறையவே கிடைத்தது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் தங்களை சுற்றி உள்ளவற்றை புரிந்து கொள்ளும் அதிகப்படியான தன்மையுடனும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.