டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழ்த் திரையுலகில் ஒரு சில படங்கள் மட்டுமே அபூர்வமாக பலராலும் பாராட்டப்படும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றாக தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படம் அமைந்தது. தமிழில் தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களும் ஓடிடியில் வெளிவந்து நெகட்டிவ்வான விமர்சனங்களைத்தான் அதிகம் பெற்றது. ஆனால், 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள்தான் கிடைத்தது.
அப்படத்தில் பழம் என்கிற திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் தனுஷைப் பற்றி எந்த அளவு பேசுகிறார்களோ, அதைவிடவும் அவரது தோழியாக ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் பற்றி பேசுகிறார்கள். இந்தப் படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற நித்யா மேனனும் முக்கிய காரணம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.
தமிழில் எப்போதாவதுதான் நித்யா மேனன் நடித்தாலும் அவரது நடிப்பால் பேச வைத்துவிடுவார். ஷோபா போன்ற தோழியர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களை ஏங்க வைத்தது அவரது நடிப்பு. தமிழ் சினிமாவில் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்களில் ஷோபனாவும் இருப்பார்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு நித்யா மேனன், “ஷோபனா மீதான அன்புக்கு நன்றி. எல்லோராலும் பேசப்படும் இப்படத்தைப் பாருங்கள்,” என நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.