ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ்த் திரையுலகில் ஒரு சில படங்கள் மட்டுமே அபூர்வமாக பலராலும் பாராட்டப்படும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றாக தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படம் அமைந்தது. தமிழில் தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களும் ஓடிடியில் வெளிவந்து நெகட்டிவ்வான விமர்சனங்களைத்தான் அதிகம் பெற்றது. ஆனால், 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள்தான் கிடைத்தது.
அப்படத்தில் பழம் என்கிற திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் தனுஷைப் பற்றி எந்த அளவு பேசுகிறார்களோ, அதைவிடவும் அவரது தோழியாக ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் பற்றி பேசுகிறார்கள். இந்தப் படம் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற நித்யா மேனனும் முக்கிய காரணம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.
தமிழில் எப்போதாவதுதான் நித்யா மேனன் நடித்தாலும் அவரது நடிப்பால் பேச வைத்துவிடுவார். ஷோபா போன்ற தோழியர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களை ஏங்க வைத்தது அவரது நடிப்பு. தமிழ் சினிமாவில் மனதை விட்டு அகலாத கதாபாத்திரங்களில் ஷோபனாவும் இருப்பார்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்கு நித்யா மேனன், “ஷோபனா மீதான அன்புக்கு நன்றி. எல்லோராலும் பேசப்படும் இப்படத்தைப் பாருங்கள்,” என நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.