ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள திரையுலகில் 10 ஆண்டுகளில் நேரம், பிரேமம் சமீபத்தில் வெளியான பிரித்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு என வெறும் மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது ரசிகர்களுடன் உரையாடும் அல்போன்ஸ் புத்ரனிடம் சமீபத்தில் ஒரு ரசிகர், அஜித்தை வைத்து நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அல்போன்ஸ் புத்ரன், “10 ஆண்டுகளுக்கு மேலாக அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்து வருகிறேன். இதுவரை எட்டு முறை சந்திக்கும் முயற்சியை எடுத்து கை கூடாமல் போனது. எனது பிரேமம் படம் வெளியானபோது படத்தின் நாயகன் நிவின்பாலியை போனில் தொடர்பு கொண்டு அஜித் பாராட்டினார்.
அப்படி அவரது பாராட்டை கூட இன்னொருவர் மூலமாக கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அஜித்தின் மேலாளர் உள்ளிட்ட இன்னும் அஜித்துக்கு நெருக்கமான சிலர் மூலமாக இப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். எனக்கு வயதாவதற்குள் எப்படியாவது அஜித்தை சந்தித்து விடவேண்டும்.. எனக்கு அஜித் படத்தை மட்டுமல்ல கமல், விஜய் ஆகியோரின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு குறையாமல் ஓடும் படமாக அது இருக்கும் என்று கூறியுள்ளார்.