விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
தெலுங்குத் திரையுலகத்தில் இதற்கு முன்பு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்ததில்லை. அந்த சாதனையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த பொங்கலுக்கு படைத்தது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் ஜனவரி 13ம் தேதியும் உலகம் முழுவதும் வெளியானது.
இரண்டு படங்களுமே 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 'வால்டர் வீரய்யா' படம் 108 கோடி வசூலையும், 'வீரசிம்ஹா ரெட்டி' படம் 104 கோடி வசூலையும் பெற்றதாக நேற்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டு படங்களுமே தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.