'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சந்தானம் சமீப காலத்தில் வித்தியாசமான முயற்சி என்கிற பெயரில் குலு குலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய படங்களில் நகைச்சுவையை குறைத்து சீரியசான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் அவை ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது புது வருடத்தை கொண்டாடும் விதமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு சுற்றி வருகிறார் சந்தானம். அந்த வகையில் சமீபத்தில் புலியுடன் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட சந்தானம் அதற்காக தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
வெளிநாட்டில் புலிகள் காப்பகம் ஒன்றில் உறங்கும் புலியின் வாலை பிடித்து இழுத்தபடி இதுதான் புலியின் வாலை பிடிக்கிறது என்பதா என்கிற கேப்ஷனுடன் ஒரு வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம். ஆனால் அந்த வீடியோவில் அந்த உறங்கும் புலியின் தலையில் அதன் பயிற்சியாளர் சிறிய தடியால் தட்டுகிறார். புலியும் சற்று உறுமியபடி எழுந்து பின் மீண்டும் அமைதியாக உறங்குகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படி வனவிலங்குகளை துன்புறுத்துவதை சந்தானம் ஆதரிக்கிறாரா ? ஒருவர் புலியை தடியால் தாக்கும்போது அது குறித்து சந்தானம் தனது எதிர்ப்பை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டபின் இந்த வீடியோவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னும் கூட ஏன் இன்னும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அதை நீக்காமல் இருக்கிறார் என்பது போன்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத ஒரு விஷயத்தில் தலையிடுவதை புலி வாலை பிடித்தது போன்று பிரச்சினையில் சிக்கிக்கொண்டான் என்பார்கள்.. ஆனால் இங்கே சந்தானமோ தற்போது புலியின் வாலையே பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பதுதான் இது ஹைலைட்.