‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
மலையாள திரையுலகில் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிப்பதுடன் விநியோகமும் செய்து வருகிறார் பிருத்விராஜ். இந்த நிலையில் தற்போது பிருத்விராஜ், மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளராக கருதப்படும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த ரெய்டு வெள்ளி அதிகாலை4.30 மணிக்குத்தான் முடிந்துள்ளது.
கேரளாவில் மட்டுமல்லாமல் இவர்களுக்கு சென்னை மற்றும் மும்பையில் சொந்தமாக இருக்கும் இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.