சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாள திரையுலகில் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிப்பதுடன் விநியோகமும் செய்து வருகிறார் பிருத்விராஜ். இந்த நிலையில் தற்போது பிருத்விராஜ், மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளராக கருதப்படும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த ரெய்டு வெள்ளி அதிகாலை4.30 மணிக்குத்தான் முடிந்துள்ளது.
கேரளாவில் மட்டுமல்லாமல் இவர்களுக்கு சென்னை மற்றும் மும்பையில் சொந்தமாக இருக்கும் இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.