ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
இந்துக்களின் புனித ஸ்தலமான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்தும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். பாரதியார் வாழ்ந்த காசி வீட்டை அவருக்கு சிலையும் திறந்துள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் 19ம் தேதி நடந்த துவக்க விழாவின் போது நடந்தது. இந்த நிலையில் மீண்டும் இளையராஜா நாளை (15ம் தேதி) காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உள்ளே இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் தமிழனாக இளையராஜா பாட உள்ளார். மாலை 6 மணிக்கு தொடங்கும் கச்சேரியில் 16 பாடல்களை இளையராஜா பாடுகிறார். அங்குள்ள சிவன் முன்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இளையராஜா முதன் முறையாகப் பாட உள்ளார். திருவாசகத்திலிருந்து 4 பாடல்கள் இடம்பெற உள்ளன.
கோயிலுக்குள் சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ள பிரமாண்ட மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. உலகம் முழுக்க இருந்து வந்திருக்கும் இசை மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் இளையராஜாவின் பக்தி இசை மழையில் நனைய இருக்கிறார்கள்.