'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' தெலுங்குப் படம், பான் இந்தியா படமாக கடந்த வருடக் கடைசியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். படத்திற்கான பிரிமீயர் காட்சிகள், டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவிலும், டிசம்பர் 3ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் நடைபெற உள்ளது. அதில் படக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். ரஷ்யாவில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மொழித் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு மொழிப் படங்கள் உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரம்மாண்டமான படங்கள் தெலுங்கில் தயாராகி வருகின்றன.