பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அந்தஸ்தைப் பெற்றார். தற்போது 'ஆதி புருஷ், புராஜக்ட் கே, பெயரிடப்படாத ஒரு படம்' என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவரும், பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'ஆதி புருஷ்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
வருண் தவான், கிர்த்தி சனோன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பேடியா' படத்தின் பிரமோஷனுக்காக கரண் ஜோஹரின் 'ஜலக் திக்லா ஜா' நிகழ்ச்சியில் வருண் மற்றும் கிர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வருணிடம் “பாலிவுட்டில் சிங்கிள் ஆக இருக்கும் நடிகைகள் யார் யார் ?,” என கரண் ஜோஹர் கேட்டார். அவர் சொன்ன பட்டியலில் கிர்த்தி சனோன் இடம் பெறவில்லை. ஏன் அவர் பெயரைச் சொல்லவில்லை என கரண் வருணிடம் கேட்டதற்கு, “கிர்த்தியின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை, ஏனென்றால் அவர் வேறொருவரின் இதயத்தில் இருக்கிறார். அவந்த மனிதர் தற்போது மும்பையில் இல்லை, தீபிகா படுகோனேவுடன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்,” என்று பதிலளித்தார். பிரபாஸ் தற்போது தீபிகாவுடன் புராஜக்ட் கே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதன் மூலம் பிரபாஸ், கிர்த்தி சனோனன் இருவரும் காதலில் இருப்பதை சக நடிகரான வருண் தவான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்களும் கருதுகிறார்கள்.