வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்தனர். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனாலும், தமிழிலும் தடம் பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு', தனுஷ் நடிக்கும் 'வாத்தி' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள்தான். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகும் 'ஆர்சி 15', வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் 'கஸ்டடி' ஆகிய படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியான 'லவ் டுடே' படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்றே நாளில் 7 கோடி வரை வசூலித்து படம் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களைத் தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம்.