தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் ரவி நடித்த கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக அவர் இயக்கியுள்ள படத்தில் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக இவானா என்பவர் நடிக்க, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக சத்யராஜின் மகளை காதலித்து அவரிடம் திருமணத்திற்கு நாயகன் பிரதீப் சம்மதம் கேட்பதாகவும் இருவருடைய மொபைல் போன்களையும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு ஆளுக்கு ஒரு நாள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் பின்பு அவர்களுக்குள் காதல் இருந்தால் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்றும் ஒரு புதிய யுத்தியை சத்யராஜ் மேற்கொள்வதாகவும் அதன்பிறகு இருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள்தான் படம் என்பதும் டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.
இளைஞர்களை கவரும் அம்சமாக நிறைய வசனங்களும் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தாலும் டிரைலரின் இறுதிக்காட்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசும் ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டு உள்ளது. மியூட் செய்து விட்டால் மட்டும் ரசிகர்களுக்கு அது தெரியாது என நினைத்து வேண்டுமென்றே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது போல அந்த வார்த்தையை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வலிந்து திணித்து மியூட்டும் செய்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு சோசியல் மீடியாவில் பலர் கண்டனம் தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.