விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு யானைகள் கொண்டு வரப்பட்டது. அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே நின்று கொண்டு அங்குள்ள மக்களிடம் யானைகள் குறித்த நேர்காணல் செய்து வந்தனர்.
இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கைது செய்தனர். அதில் சிலர் தற்போது தலைமைறவாக உள்ளனர்.
படப்பிடிப்பை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தனர் அதை நாங்கள் தடுத்தோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள் என்று விஜய் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள். டிரோன் கேமரா பயன்படுத்தவில்லை. படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை உறுதி செய்யவே சென்றோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பதிவு செய்யவில்லை என்று சேனல் தரப்பு கூறியுள்ளது.