கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
அருள்நிதிக்கு திருப்பம் தந்த மவுனகுரு, பல விருதுகளை குவித்த மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் அடுத்த படத்தை இயக்குகிறார். இதனை டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது. கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், தான்யா தவிர ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜி.எம்.சுந்தர், ரம்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.ஆர்.என் சிவா ஓளிப்பதிவு செய்கிறார், தமன் இசை அமைக்கிறார். தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அநீதி படத்தில் நாயகனாக நடிக்கும் அர்ஜூன் தாஸின் அடுத்த படம் இது. தான்யா தற்போது அகிலன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மாயோன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.