Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாடகைத்தாய் பிரச்னை : நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் பெரிய விஷயமாக்கி விட்டார்கள்: வரலட்சுமி

02 நவ, 2022 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-about-surrogacy

வாடகைத்தாய் பிரச்னை ஒன்றும் சிக்கலான விஷயம் இல்லை. அதில் நடிகர்கள் (நயன்தாரா, விக்னேஷ்சிவன்) சம்பந்தப்பட்டதால் அதனை பெரிதாக்கி விட்டார்கள் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். சமந்தா நடித்துள்ள யசோதா படத்தில் வரலட்சுமி வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் மருத்துவமனையின் சேர்மனாக நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும். சமந்தாவை போல பெரிய ஆக்ஷன் காட்சிகள் எனக்கு இல்லை. மிகவும் அமைதியான கதாபாத்திரம் எனக்கு. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது எனக்கு நானே சவாலாக எடுத்து கொள்வேன்.

என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும். இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. படத்தில் வாடகைத்தாய் என்கிற முறை சரியா தவறா என்று விவாதிக்கவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதே படத்தின் நோக்கம். மேலும் தெலுங்கில் கிராக் படத்திற்கு பின் எனக்கு நல்ல வேடங்கள் கிடைக்கின்றன. தெலுங்கு படங்களுடன் ஒன்றி விட்டேன் என்கிறார் வரலட்சுமி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவை நாகார்ஜுனா சந்திக்க உள்ளதாகத் தகவல்சமந்தாவை நாகார்ஜுனா சந்திக்க ... ஹீரோவான மணிகண்டன் : குறட்டையை வைத்து படம் உருவாகிறது ஹீரோவான மணிகண்டன் : குறட்டையை வைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
02 நவ, 2022 - 16:58 Report Abuse
LAX 00000
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in