ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யா நடித்து, தயாரித்த ஜெய்பீம் படத்தில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் இருளர் இளைஞனாக நடித்தவர் மணிகண்டன். அதற்கு முன்பு விக்ரம் வேதா, காலா படங்களில் நடித்திருந்தார். சில்லுகருப்பட்டி அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். ஜெய்பீம் வெற்றிக்கு பிறகும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த மணிகண்டன் தற்போது புதிய படம் ஒன்றில் முதன் முறையாக நாயகனாக நடிக்கிறார்.
மணிகண்டனுடன் மீரா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடிக்கிறார்கள். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஒரு இளைஞனுக்கு தூக்கத்தில் சத்தமா குறட்டை விடும் குறைபாடு இருந்தால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.