பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நடிகர் திலீப், கடந்த சில வருடங்களாக நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக பல சோதனைகளை சந்தித்து வந்தாலும் திரையுலகை பொறுத்தவரை அவரது மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. வழக்கு விசாரணைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் அவர் ஏற்கனவே தனக்கு ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண் கோபியுடன் மீண்டும் இணைந்து தனது 147வது படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலில் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஈஸ்வரி ராவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திலீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திற்குப் 'பாந்த்ரா' என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் மும்பை பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் பாணியிலான படமாக தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது.