நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கியுள்ளார்கள். குறிப்பாக இந்த படத்தை சாதாரண ரசிகன் புரிந்து கொள்வது சற்று சிரமம் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் இந்த படத்தில் மம்முட்டியின் மனதிற்கு அடிக்கடி எதிரியாக தோன்றும் சாக்கு முகமூடி அணிந்த உருவம் ஒன்று பல காட்சிகளில் நடித்து இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி தான் நட்புக்காக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர்தான் இந்த தகவலே வெளியானது.
இவரது நடிப்பு குறித்து சமீபத்தில் பாராட்டிய மம்முட்டி, “படத்தில் நடித்த மற்றவர்கள் அனைவருக்கும் தங்கள் உடல்மொழி மூலமாக நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்தது. அதே சமயம் ஆசிப் அலி தனது உருவத்தைக் காட்டாமல் நடித்து இருந்தாலும் தனது கண்களிலேயே அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்” என்று புகழ்ந்து கூறினார்.
இந்த ஆசிப் அலி தான் தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் கூமன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




