‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் சினிமாவில் ஒருசில குறும்படங்களை இயக்கி, பின்னர் இயக்குனர் சுசி கணேசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சமயத்தில், அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் லீனா மணிமேகலை. அதைத் தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்றும் சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தன்யா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிராமி விருது வென்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்சி இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் மணிமேகலை. இந்தப்படம் சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதமாக அதேசமயம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.