தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

தமிழ் சினிமாவில் ஒருசில குறும்படங்களை இயக்கி, பின்னர் இயக்குனர் சுசி கணேசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சமயத்தில், அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் லீனா மணிமேகலை. அதைத் தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்றும் சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து நாட்டின் பல இடங்களில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தன்யா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிராமி விருது வென்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்சி இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் மணிமேகலை. இந்தப்படம் சகோதரிகளின் பாசத்தை வலியுறுத்தும் விதமாக அதேசமயம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.