‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் இலக்கை எட்டிய முதல் படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய மதுர ராஜா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது மோகன்லாலை வைத்து வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பிரித்விராஜை வைத்து படம் இயக்குகிறார் வைசாக். இந்த படத்திற்கு கலிபா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.