நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ரோஷாக் என்கிற படம் வெளியானது. நிசாம் பஷீர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாகி இருந்தது. தனது கர்ப்பிணி மனைவியின் மரணத்திற்கு காரணமான எதிரியை மம்முட்டி பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை உளவியல் கண்ணோட்டத்தில் படமாக்கியுள்ளார்கள். குறிப்பாக இந்த படத்தை சாதாரண ரசிகன் புரிந்து கொள்வது சற்று சிரமம் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் இந்த படத்தில் மம்முட்டியின் மனதிற்கு அடிக்கடி எதிரியாக தோன்றும் சாக்கு முகமூடி அணிந்த உருவம் ஒன்று பல காட்சிகளில் நடித்து இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி தான் நட்புக்காக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர்தான் இந்த தகவலே வெளியானது.
இவரது நடிப்பு குறித்து சமீபத்தில் பாராட்டிய மம்முட்டி, “படத்தில் நடித்த மற்றவர்கள் அனைவருக்கும் தங்கள் உடல்மொழி மூலமாக நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்தது. அதே சமயம் ஆசிப் அலி தனது உருவத்தைக் காட்டாமல் நடித்து இருந்தாலும் தனது கண்களிலேயே அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்” என்று புகழ்ந்து கூறினார்.
இந்த ஆசிப் அலி தான் தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் கூமன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.