பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கதைகளை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வந்தார்கள். கதை தொடர்பான பிரச்னைகள், வழக்குகள் வந்தால் இந்த பதிவு அதில் முக்கியமான பங்கு வகிக்கும். ஆனால் இந்த கதை பதிவில் முறைகேடுகள் நடப்பதாக கூறி இனி இயக்குனர்கள் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என்று அறிவித்தது. இந்த கதை பதிவு தொடர்பாக இரு சங்கங்களும் மோதிக் கொண்டிருந்தன. இதில் தற்போது சுமுகமான முடிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எழுத்தாளர் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் நடைமுறையில் இருந்த கதைப்பதிவு ஒப்பந்தம் புதுப்பிக்காததாலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டனம் மற்றும் கதை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் நமது சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம். இந்த நிலையில் எழுத்தாளர்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் நமது சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனைத்து பிரச்னைகளையும் சமூகமாக முடித்து தருகிறோம். எழுத்தாளர் சங்கத்தின் ஆணி வேரான கதை பதிவை எழுத்தாளர் சங்கத்திற்கே தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அனைத்து கட்டணங்களையும் கணிசமாக குறைப்பதாக கூறினார். கதை தொடர்பான பிரச்னை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல் பெப்சி அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக கூறியிருக்கிறார். எனவே இரு சங்கமும் இணைந்து செயல்படும் நோக்கோடு எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இனி இயக்குனர்கள் தங்கள் கதையை எழுத்தாளர் சங்கத்திலேயே பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.