Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை பதிவு: முடிவுக்கு வந்தது எழுத்தாளர், இயக்குனர் சங்க மோதல்

06 அக், 2022 - 12:43 IST
எழுத்தின் அளவு:
writer-and-director-union-conflict-has-come-to-an-end-about-story-registration

திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கதைகளை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வந்தார்கள். கதை தொடர்பான பிரச்னைகள், வழக்குகள் வந்தால் இந்த பதிவு அதில் முக்கியமான பங்கு வகிக்கும். ஆனால் இந்த கதை பதிவில் முறைகேடுகள் நடப்பதாக கூறி இனி இயக்குனர்கள் தமிழ்நாடு இயக்குனர் சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என்று அறிவித்தது. இந்த கதை பதிவு தொடர்பாக இரு சங்கங்களும் மோதிக் கொண்டிருந்தன. இதில் தற்போது சுமுகமான முடிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எழுத்தாளர் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் நடைமுறையில் இருந்த கதைப்பதிவு ஒப்பந்தம் புதுப்பிக்காததாலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டனம் மற்றும் கதை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் நமது சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம். இந்த நிலையில் எழுத்தாளர்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் நமது சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனைத்து பிரச்னைகளையும் சமூகமாக முடித்து தருகிறோம். எழுத்தாளர் சங்கத்தின் ஆணி வேரான கதை பதிவை எழுத்தாளர் சங்கத்திற்கே தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அனைத்து கட்டணங்களையும் கணிசமாக குறைப்பதாக கூறினார். கதை தொடர்பான பிரச்னை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல் பெப்சி அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக கூறியிருக்கிறார். எனவே இரு சங்கமும் இணைந்து செயல்படும் நோக்கோடு எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இனி இயக்குனர்கள் தங்கள் கதையை எழுத்தாளர் சங்கத்திலேயே பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிகுஷ்பு மீண்டும் மருத்துவமனையில் ... மீண்டும் நடிக்க வருகிறார் பபிதா மீண்டும் நடிக்க வருகிறார் பபிதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in