தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

'புஷ்பா 2' நடிகரான அல்லு அர்ஜுனுக்கும், ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன் அவரது நண்பர் ஒருவருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியைச் சேர்ந்த தனது நண்பருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது பவன் தரப்பிற்குப் பிடிக்கவில்லை. இதனால், ஒரு நெருக்கடியான சூழல் இரண்டு குடும்பத் தரப்பிலும் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் 'புஷ்பா 2' நெரிசல் மரணம் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது பவன் கல்யாணின் அண்ணன்கள் சிரஞ்சீவி, நாகபாபு ஆகியோர் உடனடியாக அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்றார்கள். சிறையில் இருந்து வெளியில் வந்த பின், அவர்கள் இருவரது வீட்டிற்கும் தனது மனைவியுடன் சென்றார் அல்லு அர்ஜுன்.
ஆனால், அவரது கைது குறித்து இதுவரையிலும் பவன் கல்யாண் வெளிப்படையாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது.