ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

'புஷ்பா 2' நடிகரான அல்லு அர்ஜுனுக்கும், ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன் அவரது நண்பர் ஒருவருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியைச் சேர்ந்த தனது நண்பருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது பவன் தரப்பிற்குப் பிடிக்கவில்லை. இதனால், ஒரு நெருக்கடியான சூழல் இரண்டு குடும்பத் தரப்பிலும் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் 'புஷ்பா 2' நெரிசல் மரணம் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது பவன் கல்யாணின் அண்ணன்கள் சிரஞ்சீவி, நாகபாபு ஆகியோர் உடனடியாக அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்றார்கள். சிறையில் இருந்து வெளியில் வந்த பின், அவர்கள் இருவரது வீட்டிற்கும் தனது மனைவியுடன் சென்றார் அல்லு அர்ஜுன்.
ஆனால், அவரது கைது குறித்து இதுவரையிலும் பவன் கல்யாண் வெளிப்படையாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது.




