புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் | நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் ? மனம் திறந்த மோகன்லால் | செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்' | கடைசி படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்கை இணைக்க சொன்ன நடிகர் | மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை | 27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ |
இங்கிலாந்து நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர் லார்ட் வேவர்லி நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்து பேசினார். உலகளாவிய கலாச்சாரத்தை உலகெங்கும் பறை சாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கினைக் குறித்து இருவரும் விவாதித்தனர்.
சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது
“கமல்ஹாசன் இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு, உலகில் அவர்களின் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர்" என்று லார்ட் வேவர்லி கூறியிருக்கிறார். “நம்முடைய மக்கள் மற்றும் மக்களின் வளர்ச்சியைப் பற்றிய அறிவை உலகத் தலைவர்களுடன் விவாதிப்பதிலும் , அவர்களுடன் பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. லார்ட் வேவர்லீ என்னை சந்தித்ததற்கு நன்றி, விரைவில் மீண்டும் சந்திப்போம்”.என்று கமல் கூறினார்.