பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
பாலிவுட் படங்களில் நடித்து வருகிறவர் காயத்ரி ஐயர். கேரளாவை சேர்ந்த இவர் அறிமுகமானது ஷர்வனா என்ற கன்னட படத்தில் அதன்பிறகு தெலுங்கில் சிக்ஸ் படத்தில் நடித்தார். தமிழில் நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்தார், கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு மியாவ் என்ற படத்தில் நடித்தார். தற்போது பருந்தாகுது ஊர்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் விவேக் பிரசன்னா ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஞ்சித் உன்னி இசை அமைக்கிறார், அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். தனபாலன் கோவிந்தராஜ் இயக்குகிறார். வெவ்வேறு திசையில் இருந்து வந்து காட்டுக்குள் மாட்டிக் கொள்கிற நான்கு பேர் பற்றிய கதை. த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.